Friday, May 2, 2014

நேதாஜியை நெஞ்சில் வைப்போம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


அன்னியர் ஆட்சியை அகற்றுதற்கு
      ஆயுத வழியே ஏற்றதெனச்
சொன்னவர் யார்? நம் நேதாஜி
      சொல்லிய வண்ணம் படைதிரட்டிப்
பொன்னிகர் பாரத பூமிக்குப்
      புண்ணிய இன்னுயிர் தனையீந்த
மன்னவர் தன்னைநம் மனம்சேர்ப்போம்
      மாசறு அவரது வழிநடப்போம்