Tuesday, May 1, 2018

காவிரியும் காவேரியும்

“கல்லும் மலையும் குதித்து வந்தேன்
பெரும் காடும் செடியும் கடந்துவந்தேன்”

    இப்படிப் பாடியபடியே ஆற்றங்கரை படித்துறையின் படிகளில் குதித்து இறங்கினாள் காவேரி. ஏழு வயது நிரம்பிய காவேரிக்கு இரு அண்ணன்கள் உண்டு. ஆனால் தங்கையோ அக்காவோ கிடையாது. ஆர்வமாகப்படி இறங்கியவளை அம்மாச்சி “ஏய் பார்த்து இறங்குபுள்ள வழுக்கிறப்போகுது” என்று செல்லமாகக் கண்டித்தாள். “அம்மாச்சி இந்த காவிரி நதியைப் பார்த்து தான எனக்கு அம்மாவும் அப்பாவும் பேரு வெச்சாங்க”? என்று காவேரி கேட்டபோது அம்மாச்சி லேசாக முறுவலித்தாள்.
   
    “ஆமாண்டி செல்லம் உன் அப்பாவுக்கு பொட்டபுள்ள வேணும்ணு ரொம்ப ஆசை. உன் அண்ணங்க பொறந்தபின்னால அந்த ஆசையில இந்த காவிரி ஆத்துக்கு வந்துட்டு குளிச்சிட்டு போறப்ப “காவிரித்தாயே எனக்குப் பொண்ணு பொறக்கனும் அப்படிப் பொறந்துட்டா உன் பேரை வைக்கிறேன்னு இந்த நதிகிட்ட சொல்லிட்டு வருவாராம். அதான் உனக்கு அந்த பேரை காவேரின்னு வெச்சாரு” பாட்டி இதைச் சொன்னபோது காவேரியின் கண்கள் அகல விரிந்தன. “ஆத்துக்கு நாம பேசுறது புரியுமா அம்மாச்சி?” என கேட்டாள். ம்ம்….. புரியுமோ புரியாதோ நாம நினைக்கறத அந்த ஓடுற தண்ணி கடல்ல போய் சொல்லுமாம். அங்க இருக்கிற கடல்மாதா அலை மூலமா மேல இருக்கிற சாமிகிட்ட சொல்லுமாம். இப்படி ஒரு நம்பிக்கையிலதான் ஓடுற தண்ணியோட பேசுவாங்களாம்” அம்மாச்சி இப்படிச்சொன்னபோது காவேரி தன் கால்களைத் தொட்டு ஓடும் காவிரி ஆற்றைப்பார்த்து தனக்கு ஒரு நல்ல தோழி கிடைத்து விட்டதாக உணர்ந்தாள். “சரி சரி இனி தினமும் உன்கிட்ட என்னைப்பத்தி சொல்வேன். நீயும் என்கிட்ட அன்பாக இருக்கனும்” என்று தன்மேனியைத் தொட்ட காவிரியிடம் காவேரி சொல்லிப் பூரித்தாள்.
    தர்மபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர அழகான கிராமம்தான் காவேரி பிறந்த ஊர். செல்லப்பெண்ணாக தந்தையாலும் அண்ணன்கள் அம்மா அம்மாச்சி தாத்தா என்று எல்லோரின் அன்பாலும் வளைய வந்தாள். இருந்தாலும் வளைந்து நெளிந்து ஓடும் காவிரிதான் காவேரியின் இணையில்லாத் தோழியாக தன்னுள் அவள் வரித்துக்கொண்டாள்.
   
    “ஆற்றுத்தோழியே! நீ கோடையில் மெலிந்து பின் கொட்டும் மழையில் பெருத்து”…….. பத்து வயதுக் காவேரி காவிரியின் நீரை கைகளில் அள்ளி தன் வகுப்புத் தோழிபோல் எண்ணி தான் உண்டது முதல் விளையாடியது அன்னை தந்தை மடியிலாடி மகிழ்ந்தது வரை மெல்லிய குரலில் சொல்லி மகிழ்வாள்.
    காவிரி ஆறுபேசவில்லை. ஆனால் என்றாவது சில நாட்களில் காவேரி வரவில்லையென்றால் காவிரிக்கு துக்கமாக இருக்கும்.
   
    “ஏனடி வரவில்லை அழகுப் பதுமையே! உன்னைக் காணாமல் கரை ஏங்குதடி” காவிரி ஆற்றுத்தண்ணீர் இப்படிச் சொல்லி சலசலத்து ஓடுவது யாருக்கும் புரியாதுதான். ஆனால் அங்கு ஓர் தெய்வீக அன்பு மலர்ந்து மணம் வீசியது காவிரிக்கும் காவேரிக்கும் மட்டுமே புரியும். காவேரி பன்னிரண்டு வயதைத் தொட்டபோது அவள் மேனியில் ஆற்றங்கரை பூஞ்சோலையாக அழகும் வண்ணமும் மின்னின. காவிரி தன் நீரால் அவளை மேலும் பொலிவுபெறச்செய்தது. இப்போதெல்லாம் அம்மாச்சியோடு அம்மாவும் ஆற்றங்கரைக்கு வர ஆரம்பித்தாள். மகளின் எழிற்கோலம் பாதுகாக்கப்படவேண்டும் என அவள் ஆடைமாற்றும்போது நீராடும் போதும் காவலாக நிற்பாள். ஒரு புதுப்புனல் வரும் காலம் காவேரியின் உடலும் புதுப்புனல் கண்டது. அன்று முதல் காவிரிக்கு வரும் காவேரியை மிக விரைவில் நீராடி விட்டு வரச்சொல்லி படித்துறையின் படியில் அம்மா அமர்ந்து சொல்லும்போது காவிரியுடன் காவேரி அதிகம் பேச முடிவதில்லை. இப்படியும் அப்படியுமாக பள்ளிப்பருவம் கடந்தது. ஒரு விடுமுறை நாளில் காவேரி தன் தோழி காவிரியிடம் இப்படிச் சொன்னாள்.
       
    அண்ணனின் தோழனாம் அன்பரசன்….
    அவன் கண்களால் பாடம் சொன்னான்…..
    பல பாடங்கள் பள்ளியில் படித்த நான்
    அவன் சொன்ன பாடத்தால் பறி கொடுத்தேன் மனதை….
   
    காவிரி சிரித்தது. மகிழ்ந்தது. “காவேரிப்பெண்ணே! உன் கனவுகள் கனிய நான் கடல் மாதாவிடம் சொல்வேன்” என்று அவள் காதோரம் சலசலத்தது.
   
    “தமிழ் நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட இந்த கர்நாடக அரசு ஏன் இப்படி மறுக்கிறது? எத்தனை அணைகளைக் கட்டி இப்படி வர்ற தண்ணீரின் அளவைக் குறைத்தால் நாம என்ன செய்யுறது?
    அப்பாவின் நண்பர்கள் திண்ணையில் அமர்ந்து பேசியதைக் காவேரி கேட்டாள். அவள் கண்களில் வெந்நீர் புறப்பட்டது. மறுநாள் ஆற்றுக்குச் சென்ற அவள் காவிரியிடம் கண்கலங்கிப் பேசினாள்.

        அன்புத்தோழிக்கு அணைபோட்டு
        அடைத்தாரோ? உன்
        அழகுநடை பூமியில் புரளப்
        பூட்டும் போட்டாரோ?
        குடகில் பிறந்த உன்னைக்
        குடத்துத் தண்ணீராய்
        குறுக்கியும் வைத்தாரோ? குமரியே!
        உன் கூக்குரலைக் கேளாத
        செவிடரை என்னவென்பேன்?
        தோழியே! தோள்தட்டிச் சொல்லடி
        உன் சுமையை….

காவேரியின் இந்த விசும்பல் கேட்ட காவிரியும் பேசியது.
   
    “அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டேன் ஒருகாலம். புpன் காக்கையாக கணபதி வந்து கவிழ்த்து விட்டதில் பெருகி ஓடி வந்தேன் எனப் புராணங்கள் எழுதி வைத்தார்கள். இன்று கமண்டலம் என்றால் காக்கை கொட்டிவிடும் என்று அணைகளைக்கட்டி அடைத்துவைத்தாரடி” என்னை யாருக்குச் சொந்தமென நீதிமன்றம் கூற முடியவில்லை. நான் இயற்கை அன்னையின் பிள்ளைதான் என்றாலும் கடல் கணவனைச் சென்று கலந்திட எனக்கு ஏன் இத்தனை தடைகள் வழியெங்கும் தடுப்புகள் போட்டுவைக்க இவர்கள் யார்?” காவிரி புலம்பியது காவேரியின் கண்கள் இன்னுமொரு காவிரியானது.
    நாட்கள் பல சென்றன. காவிரியிடம் ஒருநாள் காவேரி பேசினாள்.
   
    “அன்பரசன் என் அரசனாக அன்னை தந்தை விரும்பவில்லை. அதனால் நானும் அவரும் ஒரு முடிவு செய்துள்ளோம். நாளை பொழுதுவிடியும்போது நான் அவருடன் யாரும் காணாமல் நெல்லைக்குப் போகிறேன். உன்னிடம் மட்டுமே இதனைச் சொல்கிறேன். அவரை நம்பி பயணப்படப்போகும் நான் உன்னைப்பிரிவதனால் மட்டுமே மனம் துடித்துப்போகிறேன். தோழியே! நாளை மறுநாள் முதல் நான் தாமிரபரணிக்கு அண்ணியாவேன். ஆம!; என் கணவரின் சகோதரி என் நாத்திதானே? என்னை வாழ்த்தியனுப்பு காவிரிக்கண்ணே!” என்று காவேரி தன் கண்ணீரை காவிரியில் கலந்தாள். காவிரி வாழ்த்தியது. :நீ நன்றாக வாழ்ந்திட என்றும் நான் கடல் காதலனிடம் வேண்டிக்கொள்வேன்” என்று கூறிய காவிரி சொன்னது சோகமாக…….
   
    “பெண்ணே மனிதக் கட்டுகளையும் கட்டுப்பாடுகளையும் உடைத்துவிட்டு நீ உன் காதலனோடு போகிறாய். ஆனால் மனிதன் கட்டிய அணைக்கட்டுகளைத் தாண்டி நான் பாய்ந்தோட முடியாமல் கழிவுகளையும் நாற்றங்களையும் சில இடங்களில் என் மேனியில் சுமந்து கொண்டும் சீர்கெட்டும் அழிந்து வருகிறேன். எனக்காக நீ உன்சாமியிடம் வேண்டிக்கொள்வாயா? பெண்ணே…..என் காவேரியே….
    காவிரியின் புலம்பல் காவேரிக்குப் புரிந்தது என்றாலும் காவிரி பல நூறு ஆண்டுகள் வாழ்வாள். ஆனால் காவேரி ஒரு நூறு வாழ்வதே கடினம். எனவே அழுத விழிகளோடு அனபரசனோடு அடுத்தநாள் விடிகாலை அவள் காதல் பயணம் மேற்கொண்டாள். காவேரியையாவது வாழ விடுவார்களா?......

எப்படிச் சொன்னாலும்

    பழனிச்சாமி சோர்வாக வாசலில் வந்து அமர்ந்தார். ஐம்பத்து ஏழு வயதாகும் தான் அடுத்த வருடம் ஓய்வு பெற்றுவிடுவோம் இன்னும் மகன் சரவணனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவ்வப்போது தற்காலிகமாக ஓரிரு மாதங்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வருவான். அவ்வேலைகளில் நிரந்தரமாகக் கிடைக்கும் சூழ்நிலை இருந்தாலும் பணம் செலவழித்து யாராவது அமர்ந்துவிடுவார்கள். சரி என்ன படிப்புதான் அவன் படித்தான்?

    குழந்தை முதல் பள்ளியிலும் சரிஇ கோவில்இ ரோட்டரி சங்கங்கள் என்று எங்கு வேண்டுமானாலும் பாட்டுகள் மனப்பாடம் செய்து ஒப்புவித்து பரிசுகள் பல வாங்கியவன்தான் சரவணன்.

    திருவாசகம் திருப்புகழ் தேவாரம்……என்று போட்டிகளில் பாடிப் பரிசுபெற்ற அவன் தானும் அர்ச்சகராக வேண்டுமென எண்ணியது அவன் தந்தைக்கு வியப்பளித்தது. ‘அர்ச்சகரா? நீயா? அது…..நம்ம ஆளுக எல்லாம் ஆக முடியாது. அது அந்த….ஆளுக மட்டுந்தான் ஆக முடியும்’! இது பதினாங்கு ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

    சரவணன் வளர வளர அவன் எண்ணமும் ஆலமரமாக மனதில் வேர் விழுது என ஊன்றி அழுத்தமானது. அப்போது ஒரு சிறு ஒளி ஏற்பட்டது. அல்லும; பகலும் இறைவனின் பாடல்கள் மட்டுமல்லாது புராணங்கள் படித்து தன்னை இதற்காகவே உருவாக்கிக் கொள்ள அவன் நினைத்து 12ம் வகுப்பு முடித்தபோது அன்றைய அரசாங்கம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்ததோடு மட்டுமின்றி அந்தப்படிப்பிலும் (அர்ச்சகராகப் படிப்பது) மற்ற சாதியினரையும் சேர்த்துக்கொள்ள கட்டாயச் சட்டத்தினைப் பிறப்பித்தது.

     பழனிச்சாமிக்கு மகனின் ஆசையை நிறைவேற்ற ஒரு வழி பிறந்தது. சரவணனோ தான் வணங்கிய தெய்வங்கள் எல்லாம் தன்னை மலர்த்தூவி வரவேற்பது போல் உணர்ந்தான். பழனிச்சாமிக்கும் தான் மின்சாரவாரியத்தில் வேலை பார்த்து வந்ததால் யாரைப் பிடித்து இடம் வாங்க முடியும் என்று பாதை தெரிந்தது. நடந்தது முடிந்து. சரவணன் படித்தான் நல்லமுறையில் தேர்ச்சியும் பெற்று சான்றிதழும் வாங்கினான். ஆனால் அதன்பின் இன்றுடன் அவன் படித்து முடித்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. பழனிச்சாமி வாசலில் அமர்ந்தவாறே ‘சரவணன் எங்கே?’ என்று தன் மனைவி ரேவதியிடம் கேட்டார்.

    ‘ஆங்…சொல்ல மறந்து விட்டேங்க’. இன்னைக்கு தம்பி ஒரு விஷயம் சொன்னான். சட்டம் போட்டாச்சாம். எந்த சாதிக்காரங்களும் அர்ச்சகராகலாம்னு’ அதப்பார்த்ததும் பக்கத்துலே ‘அந்த ஐயர்கிட்ட கேட்கப் போயிருக்கான். பழனிச்சாமிக்கு உற்சாகம் பிறந்தது’. “என்ன…..நிசமாவா?! அவரும் கிளம்பி சரவணன் போன அந்த அவர் வீட்டிற்குப் போனார். பின் சில மாதங்களில் சரவணனுக்கு வேலை கிடைத்தது.

    நாட்கள் மாதங்கள் வருடங்கள் ஒன்றிரண்டு கடந்தன.

    சரவணன் கோவில் கோவிலாக அனுப்பப்பட்டான். இவன் பிறந்து வளர்ந்த தெருவில் உள்ளோர்களும் சரி கோவிலுக்கு வரும் வேறுசிலரும் சரி சரவணனைக் கண்டால் திருநீறுகூட வாங்குவதில்லை அங்கிருக்கும் அந்த அவரிடம் மட்டும் “சாமி திருநீரு குங்குமம் கொடுங்க” என்று கேட்டபோது திகைத்துப் போனான். இவர் காதுபட சிலர் இப்படியும் பேசினார்கள்.

    “சர்க்கஸில் கோமாளியும் உண்டு….சிங்கம் புலி கூட வருகிற வீரர்களும் உண்டு” இவனைப் பார்த்தால் நம்மால அந்த இடத்திலே வச்சுப் பார்க்க முடியலே” சரவணனுக்கு மனம் நொந்து போனது.

    “அடப்பாவிகளா நான் கோமாளி என்றால் நீங்கள் எல்லாம் யார்? இறைவன் முன்னால் எல்லாரும் சமம் என்பதுதானே நியதி. சர்க்கஸ் கூடாரம் வேடிக்கை காட்டவும் காசு சம்பாதிக்கவும்தானே? கோவில் என்பது அப்படியா? நான் அவர்களைவிட எந்த விதத்தில் குறைந்தவன்? நல்ல காரியங்கள் கல்யாணம் இன்னபிற சடங்குகளும் நடத்த எனக்குத் தகுதியில்லை என்று நீங்கள் முடிவு செய்தால் நீங்கள் வணங்கும் தெய்வங்கள் எனக்குத் தகுதியில்லாதவை. உங்களுக்காக மந்திரம் சொல்லி இடைத்தரகனாக இறைவனுக்கும் உங்களுக்கும் இடையே இருப்பதைவிட என் அறிவையும் உடல் உறுதியையும் கொண்டு நான் கௌரவமாக வாழ்ந்து கொள்வேன். காசுக்காகவும் பிற சலுகைகளுக்காகவும் உங்களையே கேவலமாக எண்ணும் அவர்களைவிட நான் உயர்ந்து காட்டுவேன் என்று எண்ணியவாறு வெளியே வந்த சரவணன் தமிழ்நாடு நடத்திய சர்வீஸ்கமிஷன் பரீட்சைகள் எழுதி கிராம நிர்வாக அதிகாரியாக சில வருடங்களில் வேலையில் அமர்ந்தான்.

    “சாமி” இறப்பு சான்றிதழ் வேணுங்க” சாதிச் சான்றிதழ் போட்டுத் தரணும் ஐயா! வாரிசு சான்றிதழ் தேவைப்படுதுங்க சாமி” என்று கேட்டுவரும் இந்த அடியவர்களுக்காக பணம் ஏதுமின்றி பணி செய்யும் சரவணனின் சாதி இன்று பலருக்கும் மறந்து போனது.

    மந்திரங்களை “எப்படிச் சொன்னாலும்” மனங்கள் மாறாத வரையில் நாம் அடிமைகள் என்பதை நாம் அறிவுடன் உணர்வது எப்போது?
    ஒருநாள் தன் அலுவலகத்திற்கு தன்னுடன் பள்ளியில் பயின்ற ரஹிம் வந்திருந்தான் ஒரு சான்றிதழ் பெற சரவணன் மகிழ்ந்து வரவேற்றான். அவன் இப்போது இமாம் ஆகியிருப்பதாகச் சொன்னபோது சரவணன் மகிழ்ந்தான். அதே வேளையில் தான் கோவில் குருக்களாகி அவமானப்பட்டதெல்லாம் நினைவுக்கு வர ஜாதி என்ற போர்வையின்றி ரஹிம் இமாம் ஆனது இன்று மதிக்கப்படுவது….சரவணன் சிந்தித்தான். சட்டங்கள் வரலாம். ஆனால் சமுதாய மாற்றம் வராதபோது..?! பாதை மாறுவது நல்லதா? அல்லது நாத்திகனாகி சாதி சாக்கடையை ஒழிப்பதா? சிந்தித்தான் சரவணன். அவன் விடை காண்பான் விரைவில்……. 

Sunday, April 22, 2018

இவளும் பெண்தானோ?

இன்னும் சிற்சில நிமிடங்களில் தொடர்வண்டி கிளம்பப்போகிறது. பதிவுசெய்த இடங்களில் அவரவர் பெட்டிää பைகளோடு ஏறி அமர்ந்தனர். குழந்கைகள்ää இளசுகள்ää பெரியவர்கள்ää ஆம் ஒரு நிறைமாத கர்ப்பிணியும் இடங்களை நிரப்பி இருந்தனர். அந்த நிறைமாத கர்ப்பிணியுடன்ää தம்பி என்ற ஒரு இளைஞனும்ää அவளின் மூன்று வயதுப் பையனும் வந்து அமர்ந்தனர்ää அவளின் முகத்திதான் எத்தனை சோர்வு?

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் அந்த தொடர்வண்டியில்ää அவள் திருநெல்வேலி போவதாக அங்கிருந்த பெண்ணிடம் சொல்வது காதில் கேட்டது. பயணத்தில் மனம் ஒட்டாமல்ää பார்க்கும் மனிதர்களிடமும் பேசப்பிடிக்காமல் நான் அமர்ந்திருந்தேன். அவளின் மூன்று வயது மகள் “அம்மா நான் ஜன்னல் பக்கம் உட்காரனும்”ää என்று சொன்னபோதுää அவள் என் முகத்தைப் பார்த்தாள். நானும் சற்று விலகி அமரää குட்டிப்பயல் அருகே அமர்ந்தான். அவள் சிறு புன்முறுவலோடு என்னைப் பார்த்தபோதுää நானும் லேசாக முறுவலித்தேன்.

பயணம் தொடங்கி ஒருமணி நேரத்தில் செங்கல்பட்டு வந்தது. ஓரிரு நிமிடங்கள் வண்டி நின்று புறப்பட்டது. திருநங்கைகள் இருவர் கைதட்டியவாறுää காசுகேட்டுää ஆண்களின் தலையைத்தடவிää சட்டைப்பைகளில் கைவைத்து சில குறும்புகள் செய்தபோது எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. மனதுக்குள் ஒருவித கோபம் உண்டானது. பின் சற்று நேரத்தில் அவர்கள் நகர்ந்து போனார்கள். விழுப்புரம் நெருங்கும் போதுää அந்த கர்ப்பிணிப்பெண் எழுந்து அடிக்கடி கழிவறைக்குச் சென்று வந்தாள். பின் நிற்பதும்ää அமர்வதுமாக சற்று சிரமப்பட ஆரம்பித்தாள். உடன் வந்த பதினெட்டு வயதுத்தம்பி காதுகளில்ää வயர்களை மாட்டிக்கொண்டுää பாட்டுக்கேட்டுவாறு மேலே ஏறி படுத்துக் கொண்டான். எனக்குப் புரிந்ததுää அவளின் நிலை வலுத்து வருகிறது என்று. ஆனாலும் என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டமாக அவளைப்பார்த்தேன்.

தொடர்வண்டி விழுப்புரம் கடந்துää விருத்தாசலம் நோக்கிப் புறப்பட்டது. அவள் கண்களில் இப்போது கண்ணீர் வர ஆரம்பித்தது. பிற பயணிகள் அவரவர் தூங்கும் வசதி கொண்ட இருக்கைகளைப் போட்டு பாதிப்பேர் உறங்க ஆரம்பித்திருந்தனர்.
அப்போது திடீரென அவள் நின்ற இடம் முழுதும் நீர்கசிந்து நிறைந்துää நனைந்தது. அப்போது மீண்டும் அந்தத்திருநங்கைகளில் ஒருத்தி அங்கு வந்து நின்றாள்.

“உன்னை ஏறும்போதே பார்த்தேன்”ää ஏன் இன்னிக்கு பயணம் பண்ணனுமா?” “வீட்டிலே குந்த வேண்டியதுதானே? உனக்காகத் தான் நான் இங்க திரும்பவும் வந்தேன்”ää என்று அவள் சொல்லி முடிக்க “அம்மா”ää என்றவாறு அவள் குத்த வைத்தாள். சற்றும் எதிர்பாராமல் கண்விழித்த பிற பயணிகளும்ää நானும் அங்கிருந்து ஒதுங்குமாறுää அந்தத்திருநங்கை கூறää நாங்கள் சற்றும் எதிர்பாராத நிலையில் தான் கட்டியிருந்த காட்டன் சேலையை அவிழ்த்துää இரண்டு முழம் மட்டுமே கிழித்து அணிந்து கொண்டு மீதமுள்ள சேலையை லாவகமாக அந்தக் கர்ப்பிணியின் அடியில் தள்ளினாள்.

 பிறகு சிற்சில நிமிடங்களில்ää மற்ற பயணிகள் சற்றும் எதிர்பார்க்கும் முன் “ஞ்ஆ”… அழுகுரலுடன் அங்கு ஒரு உயிர் வெளிப்பட்டது. பயணிகள் ஓரிருவர் தாங்கள் வைத்திருந்த வெந்நீர் புட்டிகள்ää கத்தரிக்கோல் இத்தியாதிகள் கொடுத்து உதவää அந்தத் திருநங்கை பிரசவம் பார்த்து முடித்தாள். வண்டி அரியலூரில் நின்றபோதுää அவள் “இரயில்வே பாதுகாவலர்கள் உதவியுடன் உடல்நலம் கவனிக்கப்பட்டு………..

நான் எரிச்சலுடன் பார்த்த அந்தத்திருநங்கைää இப்போது எனக்குள் உயர்ந்து நின்றாள். சமுதாயம் புறக்கணிக்கும் இவளிடம் எத்தனை மனிதாபிமானம். இப்படியொரு உதவியை அவளால் எப்படிச் செய்ய முடிந்தது? பிள்ளை பெற்றவர்கள் (நானும்தான்) எல்லாம் திகைத்திருந்த வேளையில்ää முன்கூட்டியே அவள் முகக்குறிப்பறிந்து இந்தப் பெட்டிக்கு வந்துää உதவி புரிந்த இந்த நங்கையும் பெண்தானோ? ஆம் இவள் மிகவும் உயர்ந்த பெண்.

ஆணாகப்பிறந்த இவள் பெண்ணாகிää வாழ வழியறியாதுää இருந்தாலும் துணிவான மனமும்ää கூச்சமில்லாத அந்த நடவடிக்கையும்ää இரு உயிர்களைக் காப்பாற்றிய அந்த விவேகமும்…

இது ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்க வேண்டிய குணமல்லவா? இன்னும் என்னுள் வியப்பு அடங்கவில்லை.
-வனஜா பாண்டியன்

வைகையின் ஈரம்

வெள்ளிக்கிழமை காலை விடியும் போது வான்மதிக்கு கலக்கம். தூக்கக்கலக்கம்? இல்லையே! பின்? நாளை இந்தநேரம் கிளம்பியாக வேண்டும். எங்கு? சென்னைக்குத்தான். நேற்று மாலை முறுக்குச் சுட்டாச்சு. வத்தல் மல்லிப்பொடிகள் வடகம்… இன்றும் சில… ம்… விளையாட்டு சாமான்கள் ஒன்றிரண்டு எடுத்து வச்சாச்சு. இன்று போய் ஸ்வீட்கள் சில வாங்கவேண்டும். இந்த ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குப்போய் ‘டிரெய்ன்’ பிடிக்கனும் கலக்கம்… கலக்கம்…

முதுமை வந்தாச்சு. இளம் வயதில் வாடைää கோடை காலங்களைக் கண்டு அஞ்சியதில்லை. இரவு தாமதமாகத் தூங்கினாலும்ää விடியற்காலை முன்னதாக எழுந்து வேலை செய்தாலும் உற்சாகம் குறைந்ததில்லை.

மகனும்் மகளும் படிக்கும் வயதில் உடல் வலியோோ மனவலியோ பாதித்தாலும்் அதனை விரைவாகப் போக்கிவிட்டுு துறுதுறுப்பாக இயங்கிய நாட்கள் எத்தனை இன்பமானவை. கணவரிடம் சின்ன அல்லது பெரிய சண்டைகள் வந்தபோதும் ஓரிரு நாட்கள் அல்லது ஒருவாரத்தில் அது தொலைந்து போகும்.

பிள்ளைகள் வளர்ந்துு மணமாகி ஆளுக்கு ஒரு திசையில்் முக்கியமாக பரந்து நீண்டää நீரால் அடிக்கடி சு10ழப்பட்ட சென்னையில் வாழப்போன பின்?

ஒவ்வொரு வீட்டிலும்ää தெற்கே கன்னியாகுமரியிலிருந்து…… பிள்ளைகளைப் பார்க்கப்போய்க்கொண்டுää அந்த ஊரிலும் இருக்க முடியாமல்…. சொந்த ஊரிலும் நிரந்தரமாகத் தங்கமுடியாமல்…. எப்படிச்சொல்வது?

முக்கியமாக மதுரையிலிருந்து கிளம்பும் வைகை(லாரி) எக்ஸ்பிரஸில் செல்லும் முதியவர்கள்…. அல்லது சென்னையிலிருந்து திரும்பும் இதே கிழ உருவங்கள் படும் வேதனைகளை இதோ இந்த இளம் வயது மகன்கள்ää மகள்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை. ஓரிருநாட்கள் விடுமுறைக்கு வந்து விட்டுää எளிதாக டிக்கெட் கிடைக்கும் இதே வைகையில் அவர்கள் திரும்பும்போது இந்த முதியமுகங்களின் துயரங்களைப் பாப்பதுண்டு. அவர்களின் மூட்டைää முடிச்சுகளை ஊர்கள் வரும்போது ஏற்றி இறக்க உதவுவதோடு மட்டுமின்றிää அவர்களுக்கு சிறுசிறு உதவிகளையும் செய்வதுண்டு.

வான்மதி புரண்டு படுத்தாள். நாளைக்கு?.... மணி ஆறாகும்போது கிளம்பியாக வேண்டும்.

அவளுக்கும் ஒவ்வொரு மாதம் பயணத்திலும்ää தான் பெறாத மகன்கள் அல்லது மகள்கள் உதவுவதுண்டு.

இந்த வருடமும் மதுரைப்பக்கம் மழையே இல்லையே! இந்த வைகையில் கொஞ்சம் கூட ஈரம் இல்லையே! யாரோ அவள் பயணம் செய்யும்போது சொன்னார்கள்.

யார் சொன்னது வைகையில் ஈரம் இல்லையென்று? இன்று கூட இவள் வண்டி ஏறும்போது இளைஞன் ஒருவன் இவளிடம் “அம்மாச்சி’ää பையைக் கொடுங்க”… என்று வாங்கிää கட்டைப் பைச்சுமையை வண்டியில் ஏற்றி வைத்தான்.

இருக்கையில் அருகிருந்த பெண்மகள் ஒருத்திää (ஐ.வுயில் வேலை செய்பவளாம்) நான் கொஞ்ச நேரம் நிக்கிறேன். நீங்க காலை நீட்டிää ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொன்னாள். வான்மதி தனியாகப் பயணம் செய்தபோதும்…. இதோ ஈரம் இந்த வைகையில் இருக்கிறது. மழை இல்லாவிட்டாலும்ää தண்ணீர் இல்லா விட்டாலும். இந்த வைகை தினமும் ஓடுகிறது. இளநெஞ்சு ஈரங்கள் அன்பாக நனைத்து குளர்விக்கின்றன. இறக்கித் தந்துää சிறிது தூரம் தூக்கிவந்து…. வான்மதிக்கு பயணம் இன்னும் சில ஆண்டுகளுக்குச் சலிக்காது. “வைகையின் ஈரத்தால்”.
-வனஜா பாண்டியன்

நிழல் தரும் காதல்

நெரிசலான மாலை நேரம். பள்ளிகள் கல்லூரிகள் முடிந்து அலுவலகங்கள் சில முடிந்து வீடு திரும்பும் பலரையும் பரபரப்பாக்கும் மாலை நேரம்இ அருணாச்சலமும் தன் இருசக்கரவாகனத்தை தான் வேலைபார்க்கும் தபால் நிலையத்திற்கு அருகில் இருந்து நகர்த்தி கொண்டிருந்தான்.

 எதிரே நின்ற அவள்(ன்) இவனையே பார்ப்பது தெரிந்தது. பின் அதனை சட்டை செய்யாமல் வண்டியில் ஏறினான். அருணாசலத்தின் மனம் ஏனோ பாரமாகக் கனத்தது. இருபத்தொரு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வரää அடிவயிறு கூட ஏதோ செய்தது. அன்று வெகுநேரம் கடந்தே அருணாச்சலம் தூங்கினான். மனைவியும்இ குழந்தைகளும் கேட்டபோது தலைவலிஇ உடல் அசதி என்று ஏதோ சொல்லிச் சமாளித்தான்.

 மறுநாள் மாலையும் அவன் இருசக்கர வாகனத்தை நகர்த்தியபோது சுற்றும் முற்றும் பார்த்தான். அவள்(ன்) நிற்பது சற்று தொலைவில் தெரிந்தது.

அருணாச்சலத்தின் நெஞ்சுபடபடக்கää உற்றுநோக்கினான் அவள்(ன்) சட்டென வேகமாக நடக்க ஆரம்பித்தாள்(ன்). அருணாச்சலம் வண்டியில் ஏறிää பின் தொடர்ந்தான். “நில்லுப்பா ஏய் நீ வேதா தானே? சட்டென நின்றாள் வேதா என்கிற முன் நாளைய வேதாச்சலம்.

“வந்து இல்லையே நீங்க யாரு?” என்றவளின் கண்களிள் கண்ணீர் ஊற்றெடுத்தது. அருணாச்சலம் வண்டியை விட்டு இறங்கினான்.

“என்னை எத்தனை நாளா நீ மறைந்திருந்து பார்த்துகிட்டு இருக்க”? என்று அருணாச்சலம் கேட்க வேதாவினால் கண்ணீரை அடக்கமுடியவில்லை. “அண்ணா நீ நல்லாருக்கியா? நீ எப்ப விழுப்புரத்துக்கு வந்த? உனக்குக் கல்யாணம் ஆயிருச்சா? அம்மாää அப்பா அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க?”

வேதாவின் கண்களில் அணை உடைந்து கண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. உடல் நடுக்கம் அதிகமானது. அருணாச்சலம் பதினெட்டு வயது இளைஞன். அவன் சகோதரிக்கு இருபத்தொரு வயது அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்த நேரம். வேதாச்சலம் பதினாறு வயதைதொட்டான். (ஏற்கனவே பதினாங்கு வயது முதல் அவனுக்குள் தான் யாரென்று அவஸ்தைபட்டுவந்தான்.) தனக்குள் ஏற்பட்ட பெண்ணாகும் தன் உணர்வினை மெல்லத் தன் தாயிடம் சொன்னான். அவள் பதட்டம் பயம் தொற்றிக்கொள்ள கணவரிடம் அன்றிரவே கூறி அழத்தொடங்கினாள். வேதாச்சலம் இப்படிப்பெண் உணர்வு கொள்ளத்தொடங்கிய நாள் முதல் அவன் அக்கா சற்று அறிந்திருந்தாள். தன் வளையல்கள்ää ஆடம்பர மேக்கப் சாதனங்கள் இவற்றை அவன் விரும்பிப் பயன்படுத்தியபோது அவள் அதனை குற்றமாகக் கருதவில்லை. மாறாக எல்லோரையும் விட நல்ல நிறமாக இருந்த வேதாச்சலத்திற்கு அழகாக இருப்பதாகக் கூறுவாள். ஆனால் அதிலிருந்து அடிப்படையான உணர்வினை அவள் உள்ள10ர அறியவில்லை. தாயிடமோ வேறு யாரிடமோ கூறவில்லை. ஆனால் வேதாச்சலம் இப்போது இந்தப் பதினாறு வயதில் தன்னைப் பற்றி வெளிப்படையாகக் கூறியபோது வீட்டில் பூகம்பம் வெடித்தது.

இயல்பாகவே கோபக்காரரான அப்பாää அவன் அம்மா கூறி அழுத அந்த இரவிலேயே அழைத்து நன்கு அடித்துää மிரட்டி வைத்தார். வேதாச்சலம் மனது நொறுங்கிப்போனது. மதுரைக்கு அருகில் இருந்த சிற்றூரிலிருந்து அக்காவைப் பெண்பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். அன்று அக்கா தலைநிறைய பூச்சூடி பொட்டுவைத்துää வண்ண உடையணிந்து நகையணிந்து……. வேதாவின் மனம் அடக்க முடியாத ஆசையை அடைந்தது. வீட்டில் அனைவரும் உறங்கியப்பின்ää அன்றிரவே வேதாச்சலம் மாடி அறைக்குச் சென்று அறையைப்பூட்டி விட்டுää தன்னை அலங்கரித்து மகிழ்ந்தான். இவன் இப்படி நின்ற வேளைää அப்பா அங்கு வந்து நின்றார். தன் கையில் கொண்டுவந்திருந்த செருப்பால் அவனை நையப்புடைத்தார்.

 சுருண்டு விழுந்த வேதா ஒரு மூலையில் இரண்டு நாட்களாக அழுத வண்ணம் படுத்திருந்தான். அம்மாவும்ää அக்காவும்ää அண்ணனும் அவனை சமாதானம் செய்த போதும்ää “இனி இப்படி நடந்துக்காதேää லட்சணமா ஆம்பளைப் பிள்ளையாய் இரு” என்று சொன்னபோதுää வேதா தனுக்குள் ஒரு முடிவெடுத்தான். பின் மறுநாள் ஆண்மகனாகவே உடையணிந்து பள்ளி செல்வதாகக் கூறி வெளியேறியவன்ää வீட்டையும்ää தான் பிறந்த ஊரையும் விட்டு வெகுதூரம்… வெகுதூரம்… வெகுநாட்கள்…. ஆண்டுகள் என்று சென்றவன்… இன்று அண்ணன் முன் “வேதா” என்கிற திருநங்கையாக நிற்பது எத்தகைய ஒரு நிலையை அவளுக்கு ஏற்படுத்தி இருக்கும்?

ஒருவாரம் முன்பு தன் சகாக்களுடன் இருந்த போஸ்ட் ஆபீஸ் அருகே வந்தபோதுää அருணாச்சலத்தை பார்த்த வேதா தன் அண்ணன் முகத்தை எளிதில் கண்டுபிடித்துவிட்டாள். ஆனால் வேதாவைப் பார்த்த அருணாச்சலம் முதலில் கண்டுபிடிக்கவில்லை. என்றாலும் சிறுவயதில் காணாமல் போன தன் சகோதரன் வேதாச்சலத்தை அவன் நினைவிற்குக் கொண்டுவந்துää அவனும் இதுபோல் திருநங்கையாக இருப்பானோ என்று எண்ணிää பின் இன்று…….. “வேதா உன்னைப்பிரிந்த துயரில் நாங்கள் தவித்த நிலையில் அக்காவின் திருமணம் நடந்து முடிந்தது. பின் நான் படித்து முடித்து வேலைக்குச் சென்றேன். எனக்கும் மணம் முடிந்த ஓரிரு ஆண்டுகளில் அம்மா வெளிப்படுத்தாத துயரில் இதயம் தாங்காமல்  உலகை விட்டுச்சென்றுவிட்டாள். அப்பா உன்னைத் தேடவே கூடாது என்று கூறிய போதும்ää “வேதாää வேதா”  என்று உன்னை மெல்லிய குரலில் கூப்பிட்டுப்பார்த்தார். இரண்டு வருடங்கள் முன்பு வரை நடைபிணமாக வாழ்ந்த அவர்ää கிடைபிணமானார். எல்லாம் முடிந்து பின் எனக்கும் அந்த ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை. போஸ்ட் ஆபீஸ் வேலையில் இருந்த நான் மாற்றலாகி இங்கு வந்து ஒருமாதமாகிறது. “வேதா நீ எப்படி இருக்க? வேதாவின் அழுகை அடங்கியது”. இருக்கேன் என்னைப்போன்றவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணி வாழ்கிறேன். எங்கள் உலகம் மிகவும் வித்தியாசமானது. இது துன்பமானதா? இன்பமானதா? சரியா? தவறா? இவையெல்லாம் நாங்கள் ஆராய்ச்சி செய்வதில்லை. வயிறு நிறைந்துää வண்ணமாக உடையணிந்துää மற்றவர்கள் (முக்கியமாக ஆண்கள்) எங்களை ரசிக்கும் போது மனமகிழ்ந்து விளையாட்டாக அல்லது வேதனையாக வாழ்ந்து கொள்கிறோம். பணத்தேவைகளுக்காக நாங்கள் படும்பாடு சொல்லமுடியாது”. படபடத்த வேதா தன் சகோதரி நங்கைகள் சற்று தூரத்தில் தனக்காக காத்திருப்பதைப் பார்த்துவிட்டு “சரி நான் வர்றேன்ää நாளை பார்க்கலாம்” என்றவாறே வேதா நகர்ந்து சென்றாள்.


பல நாட்கள் இவ்வாறு வேதாவும் அருணாச்சலமும் சந்தித்துக்கொண்டார்கள். ஒருநாள் அருணாச்சலம் வேதாவை வீட்டிற்கு அழைத்தான். வேதா வியப்புடன் நான் வந்தால் உன் மனைவிää பிள்ளைகள் என்னை எப்படிப்பார்ப்பாங்க? நீ உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே.” என்று சொன்னாள். “இல்லை வேதா உன் அண்ணி ரொம்ப நல்லவ. உன்னை வீட்டுக்குக் கூட்டிவரச் சொன்னதே அவள்தான்”.

வேதா மனமில்லாமல் அண்ணனுடன் சென்றாள். அண்ணி பரிமளா அவளை அன்புடன் வரவேற்றாள். அண்ணனின் மகனும்ää மகளும் அவளை அத்தை என்று அழைத்தபோது வேதாவிற்கு கூச்சமாகவுமää; மகிழ்ச்சியாகவும் இருந்தது. பின் அடிக்கடி வேதா அங்கு வந்து போனாள். பின் ஒரிரு நாட்கள் தங்கியும்ää பின் வாரம்ää மாதம் என்று தங்கிச்சென்றாள். அண்ணியின் அண்ணன் குமாரசாமியும் வேதா அங்கிருந்த நாட்களில் சிலநேரம் வந்துசெல்வார். அவர் சிறுவயது முதல் திருமணமே வேண்டாம் என்று வாழ்ந்தவர். (அவர் மனதில் இருந்த காரணம் ஒருபோதும் வெளிப்பட்டதில்லை.) இன்று ஐம்பதைக் கடந்த அவர் வேதாவின் பரிவான வார்த்தைகள்ää அண்ணி வேலைக்குச் சென்ற நாட்களில் குமாரசாமிக்கு சாப்பாடு போடுவது காப்பி தருவதுää சிலநேரங்களில் அவர் உடைகளை மடித்து வைத்து…. இப்படி பாசமாக சில செயல்களைச் செய்த போதுää அவள் பால் அன்பு கொள்ளச்செய்தது. வீட்டிற்கு அருகிலேயே தையல் கடை வைத்திருந்த குமாரசாமி பட்டன் தைப்பதுää இன்ன பிற வேலைகளையும் வேதாவிற்குக் கற்றுத்தரää ஒருவர் மற்றொருவரின் அன்புää ஆதரவினை அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

அருணாச்சலம் இதனை அறியாமல் இல்லை. அவனுக்கு பரிமளம் என்ன நினைப்பாளோää இதனால் மீண்டும் வேதாவை பிரிய நேருமோ என்று பயம் ஏற்படää அன்று மாலையே பரிமளத்திடம் பேச நினைத்தான்.

“என்னங்க நான் ஒன்னு சொல்வேன்ää நீங்க தப்பா எண்ணக்கூடாது” என்று பீடிகை போட்டபோது அருணாச்சலம் சற்றே ஆடிப்போனான்.
“என்ன பரிமளா? என்ன சொல்லப்போற? அவன் மனம் படபடக்கக் கேட்டான்”. “வந்து அண்ணனுக்கு ஐம்பது வயசாகுது. நம்பிள்ளைகளும் வளர்ந்துட்டாங்க. அதனால”…என்றவளை அருணாச்சலம் நிமிர்ந்து நோக்கினான். “நம்ம வேதாவை”….துணையாக வாழ வைச்சா என்னனு தோணுது.

அருணாச்சலத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இது எப்படி சாத்தியம்? இருவரும் ஆண்கள் என்ற அடிப்படையில் பார்ப்பதா? அல்லது…. “இதை அவர்களிடம் கேட்போமே”  என்று சொன்னான்.

வேதாவும்ää குமாரசாமியும் இவர்களிடம் கலந்துரையாடியபோது அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.

“நாங்கள் மணம் புரிவது சட்டப்படி எங்கும் பதியமுடியாது. ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல துணை. எங்கள் தேவைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். பகிர்ந்துகொள்வோம். துணையே வேண்டாம்;ää அல்லது அது சாத்தியமில்லை என்று எண்ணிய எங்களால் இன்று மனம் ஒத்து அன்புää பாசமுடன் வாழமுடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எங்களுக்குக் குழந்தைகள் பிறக்காது. ஆனால் எங்களைப் போன்றவர்கள் இனிவரும் தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவோம். பிறக்கும் விந்தையான உணர்வுகள் கொண்டவர்களும்ää இனி கௌரவமாக வாழவேண்டும். மனிதனே சட்டங்களைச் செய்தான். இனி இதுவும் மனங்களில் ஏற்றுக் கொள்ளப்படும் சட்டமாகட்டும் எங்கள் காதல் ஒருவருக்கொருவர் நிழலாகும் என்று பேசி முடித்தார்கள். பரிமளமும்ää அருணாச்சலமும் தங்கள் பிள்ளைகளை கட்டிக் கொடுத்தது போல் நிம்மதி அடைந்தார்கள்.
-வனஜா பாண்டியன்

Sunday, September 17, 2017

கண்ணாடிக் கனவுகள்

"ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது, ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி..." சிறுவர் சிறுமியர் முழுஆண்டு விடுமுறையில் ஆலமரத்தடியில் அந்த எழுமலை கிராமத்தில் விளையாடிய காலம் அது. அன்று அவர்களுக்கு எட்டு முதல் பத்து வயதிருக்கும். அதே வயதைக்கொண்ட செல்லம்மாள் மட்டும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவள் அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு அருகில் கிடந்த பாறைக்கல் ஒன்றின் மேல் அமர்ந்திருந்தாள். சங்கரி அவளை பார்த்து "ஏ செல்லம், நீ விளையாட வரலியா?" என்று கேட்டபோது செல்லம் சொன்னாள் "எனக்கு இந்த விளையாட்டு பிடிக்கும்தான், ஆனா நம்ம டாக்டர் விளையாட்டு விளையாடலாம் போல இருக்கு..." என்றாள். "ஏய், அது விளையாட ஊசி போடணும், காய்ச்சல் வச்சிப் பாக்கனும், ம்ம்ம்... அப்புறம்..." என்று சங்கரி இழுத்தபோது செல்லம் குறுக்கிட்டால். "பரவாயில்லை. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்". மற்ற சிறுவர் சிறுமியரும் "சார், கொஞ்ச நேரம் அப்பிடியும் விளையாடலாம்" என்றார்கள்.

செல்லம் வீட்டிற்குள் ஓடிச்சென்று, அவள் அண்ணன் சட்டை ஒன்றை அணிந்து வந்தால். தன் பள்ளிச் சீருடைக்குப் பொருத்தமான ரிப்பன் இரண்டையும் எடுத்து வந்து, சிறிய கல் ஒன்றை இடையே கட்டி இணைத்தாள். பின்பு அதனை "ஸ்டெத்" போல் கழுத்தில் மாட்டிக்கொண்டாள். தன தோழி சங்கரியை அழைத்து "நீதான் நர்ஸ்" என்றாள். "சிஸ்டர், முதலாவதாக வந்த நோயாளிய வரச் சொல்லு" என்று சொல்ல, தோழி சங்கரியும், ஒரு பையனை அனுப்பினாள். ஒரு தேர்ந்த மருத்துவர் போல் கண்ணால் உருவாக்கப்பட்ட ஸ்டெத்தை வைத்துப் பார்த்து, நாக்கை நீட்டச் சொல்லி, கண்களை விரித்துப் பார்த்து, "ஓ.கே. உனக்கு ஒரு ஊசி போட்டா சரியாயிரும்" என்று திண்ணை ஓரமாக அடித்து வைத்திருந்த தென்னைமாரு குச்சியை எடுத்து, எப்போதோ கண்டெடுத்த ஒரு சிறிய சென்ட் பாட்டில் மேல் வைத்து மருந்தெடுப்பது போல் பாவனை செய்து ஊசி போட்டாள். நின்றிருந்த சிறுவனோ "ஆ" என்று அலறுவது போல் நடிக்க, மற்ற சிறார்களும் "ஓ"வென்று கூவி சிரிக்க, மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் செல்லம்.

அப்போது அந்த வழியே வந்த பலம் விற்கும் தங்கம்மாள் பாட்டி, "அடியே செல்லம், நீ டாக்டராகி நம்ம ஊர் சனங்கள காப்பாத்தனும். இங்க நல்ல டாக்டர், ஆஸ்பத்திரி இல்லாம கஷ்டப்படுற நம்ம ஊரைக் கவனிச்சிக்க" என்றபடியே கடந்து சென்றாள். செல்லம்மாள் மனம் தனக்குள் ஏதோ ஒரு விதை துளைத்து வழியே வரத் துடிக்கும் ஒரு சிறு செடிபோல் உணரத் தொடங்கினாள். ஆம். அவள் ஆசையும் அதுதான். ஒன்பது வயதில் தனக்குள் ஒரு மருத்துவக் கரு உருவாவதை உணர்ந்தாள். அதை வளர்த்து, வெளிக்கொணர என்ன செய்ய வேண்டும்? எப்படி எல்லாம் முயற்சி செய்ய வேண்டும்? பக்கத்துத் தெருவில் வசிக்கும் குருமூர்த்தி சாரைக் கேட்க வேண்டும். ஆம். அவர் ஆசிரியராக வேலை பார்ப்பவர். போன ஆண்டு அவர் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தபோது தன அப்பாவிடம் வந்து இனிப்பு வழங்கிச் சென்றது அவளுக்கு நினைவிற்கு வந்தது.

ஆண்டுகள் நடைபோட செல்லம்மாளின் கனவுக்கு கண்ணாடி மாளிகை அவள் முயற்சியாலும், படிப்பினாலும், உயரத் தொடங்கியது. பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாகத் தேறினாள். மாவட்ட அளவில் மூன்றாவது இடம். பல நாட்கள் கூலி வேலை செய்யும் தாய் தந்தையரால் நல்ல உணவுகூடத் தர முடியாது. இருப்பதை உண்ணுவாள். வயல் காடுகளுக்கு மோட்டார் போட்டு நீர் பாய்ச்சும் மின்சாரம் தடைபடும். அப்போதும் மனம்  மெழுகுதிரி அல்லது சிம்னி விளக்கொளியில் படிப்பாள். குருமூர்த்தி ஐயாவிடம் சந்தேகம் இருந்தால் சென்று கேட்டுக்கொள்வாள். பதினோராம் வகுப்பு முடியும் பொது தாய்மாமன் வீட்டில் பெண் கேட்டு வந்தார்கள். "வசதியானவர் என் தம்பி, உன்னைத் தன் மக போல பாத்துக்குவான்" இது அம்மாவின் புலம்பல். ஒரு நிமிடம் மாமா மகன் முகம் நினைவில் வந்து போகும். மாரு நிமிடம் மருத்துவக் கண்ணாடி மளிகை அவளுக்குள் மிளிரும். "அம்மா நா படிக்கணும், டாக்டராகணும்". மாமா சொல்வார் "செல்லம், உன்ன நா படிக்க வைக்கிறேன். இப்போ பரிசம் மட்டும் போட்டுக்குவோம்."

"போங்க மாமா நா டாக்டராகிட்டு அப்புறம் பாக்கலாம்" இப்படிச்  அங்கிருந்து செல்லம் சென்று விடுவாள். நாட்கள் நகராத தொடங்கின. 12ஆம் வகுப்பு தெருவுத்தேதியும் வந்து சேர்ந்தது. தேர்வு எழுதி வெளியே வாரும் மாணவமாணவியர் பலபேர் கடினமாக இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால் பக்கத்து ஊரில் போய் தேர்வு எழுதிவரும் அலுப்பைத்தவிர செல்லத்துக்கு எதுவுமே கடினமாக இருக்கவில்லை.

"ஏம்மா செல்லம், நீட் தேர்வுக்கு நீ உன்னைத் தயார் பண்ணணுமே?" என்று குருமூர்த்தி சார் சொன்னபோது அதுபற்றி அவ்வளவாக அறிந்திராத செல்லம் கலக்கமுற்றாள். தேர்வு முடிவுகள் வெளியானபோது மாவட்ட அளவில் இரண்டாவது மாணவியாக 1181/1200 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தாள். இப்போது அவளுக்குள் இருந்த கண்ணாடி மாளிகை ஒளிபெற்று அவளை மருத்துவராகக் கண்முன் கொண்டுவர "நீட் தேர்வு" அவள் குறுகிப்போனால். மீண்டும் படித்தாள். ஓடி, ஓடி உயர்கல்வி படித்தவர்களிடமெல்லாம் உதவி கேட்டாள்.

பன்னிரண்டு ஆண்டுகள் கல்விக் கடலில் நீச்சல் அடித்து கரையேரப் போகையில் "நீட் புயல்" தன்னை மூழ்கடித்து விடுமோ? மனம் தளரக்கூடாது. நான் படித்து இதையும் வெல்வேன் என்றவள் முயற்சித்துப் படித்தால். ஆனால் நடந்தது என்ன? அரசியல்ப் பெரியவர்களும் தன்னைப் போன்ற கிராமப்புற பிள்ளைகளுக்காகப் போராடித் தோற்றது போல, அவளும் தோற்றுப் போனாள். அவளின் கண்ணாடிக்கு கனவு மாளிகை நொறுங்கி விழும் சப்தம் "ஆ அம்மா! நான் என்ன செய்வேன்? என்னால் இன்னொரு கனவுக்குள் சென்று நான் நொருங்கிப் போவதை விட, இதோ! இதோ!"

"செல்லம் இப்படி பண்ணிட்டியே?" இந்த அழுகுரல் தமிழ்நாடு முழுவதும் ஒழிக்க அவள் நிம்மதியாக உறங்கிப்போனால். உண்ணாமல், உறங்காமல் கனவு கண்டு, இன்று கனவுகள் காணமுடியாத பசியில்லாத உறக்கம் அவளைக் கண்ணாடிப் பெட்டிக்குள் கால்களை நீட்டி, நீட்டாக நீட் நினைவின்றி நிம்மதி காண வைத்தது.

-ப. வனஜா

Sunday, July 3, 2016

மழையே வாழ்க! (இருவிகற்ப நேரிசை வெண்பா)


வாடும் பயிர்காக்க வாராதோ காவிரியில்
ஓடும்நீர் என்றதுயர் ஓட்டிடவே – நீடுபுகழ்
கார்முகிலே வந்து கருணையுடன் நீ(ர்)பொழிந்தாய்
சீர்மிகுநீ வாழ்க செழித்து